பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'புஷ்பா 2'. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் வட இந்திய, ஹிந்தி தியேட்டர் உரிமை சுமார் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. பிரபல வினியோகஸ்தரான அனில் தடானி 'அட்வான்ஸ் முறை'யில் அந்த உரிமையை வாங்கியுள்ளாராம். 'ஜவான்' படத்தின் தியேட்டர் உரிமை கூட 150 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படியிருக்க டப்பிங் படமான 'புஷ்பா 2' படம் அதைவிட 50 கோடி கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
400 கோடிக்கு அதிகமாக வசூலித்தால் மட்டுமே அந்த 200 கோடி ரூபாய் முதலீட்டை எடுக்க முடியும். இருந்தாலும் படம் அதை வசூலிக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கியுள்ளதாகப் பேசிக் கொள்கிறார்கள். 1000 கோடிக்கும் அதிகமான வசூலை 'புஷ்பா 2' எட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.