நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதே சமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள ஊர்வசி ரவுட்டேலா அங்கே தினசரி ஜிம்முக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி அவர் செல்லும் ஜிம்மில் தான் நடிகர் ஜூனியர் என்டிஆரும் ஒர்க்-அவுட் செய்து இருக்கிறார். சமீபத்தில் ஜிம்மில் ஜூனியர் என்டிஆரை சந்தித்த ஊர்வசி ரவுட்டேலா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடும்போது, “குளோபல் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் ஒழுக்கம், நேர்மை, முகத்திற்கு நேராக எதையும் நேரடியாக பேசி விடுவது மற்றும் அவரது எளிமை என அனைத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அவருடைய அன்பிற்கும் தூண்டுதலுக்கும் மில்லியன் கணக்கில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சிங்க இதயத்தை கொண்ட ஒரு மனிதர். உங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்றும் வாய்ப்புக்காக என்னால் நீண்டநாள் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.