கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி | டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி |
2024 பார்லிமென்ட் தேர்தல் இந்தியாவில் ஆறு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. அதேசமயம் வட மாநிலங்களில் வெவ்வேறு கட்டமாக நடைபெறும் தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தன்னுடைய டீப் பேக் வீடியோவை உருவாக்கி காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என குற்றம் சாட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான் மும்பை சைபர் கிரைம் போலீசாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்து இருக்கிறார். மேலும் தேர்தல் தொடர்பான பல அலுவலர்களுக்கும் இதுகுறித்து புகார் அனுப்பியுள்ளார் அமீர்கான்
அமீர்கான் சின்னத்திரையில் பல வருடங்களாக தொகுத்து வழங்கி பிரபலமான ரியாலிட்டி ஷோவான சத்தியமேவ ஜெயதே என்கிற நிகழ்ச்சியில் இருந்து அவர் பேசுகின்ற அரை நிமிட வீடியோ காட்சியை டீப் பேக் முறையில் உருவாக்கி பாஜகவிற்கு எதிராக பிரச்சார உத்தியாக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் அமீர்கான். மேலும் கடந்த 35 வருடங்களில், தேர்தலில் மக்கள் ஓட்டளிப்பது குறித்து தேர்தல் கமிஷனுக்கு உதவும் விதமாக தான் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எந்த கட்சிக்கும் ஆதரவாக நான் பேசியதும் இல்லை.. வீடியோ வெளியிட்டதும் இல்லை.. இதனை உருவாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.