இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதே சமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள ஊர்வசி ரவுட்டேலா அங்கே தினசரி ஜிம்முக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி அவர் செல்லும் ஜிம்மில் தான் நடிகர் ஜூனியர் என்டிஆரும் ஒர்க்-அவுட் செய்து இருக்கிறார். சமீபத்தில் ஜிம்மில் ஜூனியர் என்டிஆரை சந்தித்த ஊர்வசி ரவுட்டேலா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பு குறித்து அவர் குறிப்பிடும்போது, “குளோபல் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்டிஆரின் ஒழுக்கம், நேர்மை, முகத்திற்கு நேராக எதையும் நேரடியாக பேசி விடுவது மற்றும் அவரது எளிமை என அனைத்தையும் கண்டு ஆச்சரியப்படுகிறேன். அவருடைய அன்பிற்கும் தூண்டுதலுக்கும் மில்லியன் கணக்கில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சிங்க இதயத்தை கொண்ட ஒரு மனிதர். உங்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்றும் வாய்ப்புக்காக என்னால் நீண்டநாள் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.