போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் ஆரம்பத்தில் சூர்யா நடித்து, தயாரித்தார். பின்னர் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படத்தில் இருந்து விலக்கினார். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் படம் தயாரானது. கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அமைதிப்படை 2, கங்காரு, மிகமிக அவசரம், மாநாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். “வணங்கான் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. பாலாவுடன் பணியாற்றியது எனது பாக்கியம். விலை மதிப்பற்ற அனுபவம். எனது இதயத்திற்கு நெருக்கமான படமாக வணங்கான் மாறி இருக்கிறது. ஒரு அசாதாரண வேலையை முடித்தது போன்று உணர்கிறேன்” என்று குறிபிட்டுள்ளார்.