பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
'நாச்சியார், வர்மா' படங்களுக்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் 'வணங்கான்'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். அவர்களுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறும்போது, ''இந்த வணங்கான் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான ஒரு கதையில் உருவாகியுள்ளது. அதோடு இந்த வணங்கான், பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் ஒரு படமாகவும் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது'' என்கிறார்.