சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
'நாச்சியார், வர்மா' படங்களுக்கு பிறகு பாலா இயக்கி உள்ள படம் 'வணங்கான்'. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். அவர்களுடன் சமுத்திரகனி, மிஷ்கின், ராதாரவி, சிங்கம்புலி, அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து நடிகர் அருண் விஜய் கூறும்போது, ''இந்த வணங்கான் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான ஒரு கதையில் உருவாகியுள்ளது. அதோடு இந்த வணங்கான், பாலா எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தும் ஒரு படமாகவும் இருக்கும். பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது'' என்கிறார்.