தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடகர், இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞர். இந்திய மொழிகள் அனைத்திலும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த சமயத்தில் மரணம் அடைந்தார்.
சென்னையில் அவர் வசித்து வந்த தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது மகன் அவருக்கு மணி மண்டபம் கட்டி உள்ளார். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் அரியானா முன்னாள் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, தெலுங்கானா அமைச்சர் ஸ்ரீதர் பாபு, பா.ஜ., மாநில தலைவர் ராமச்சந்திரராவ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண், சகோதரி எஸ்.பி.சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.