கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்தவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 26வது படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போகிறார். அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கும் இந்த படத்தின் ப்ரமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த கதையில் ஏற்கனவே சிம்பு நடிக்க இருந்ததாகவும், அந்த கதையில்தான் தற்போது பிரதீப் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை மறுத்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு இடத்தில் நான் கூறிய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறு கதை என்று தெரிவித்திருப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நானும் பிரதீப் ரங்கநாதனும் ஒன்றாக பணியாற்றினோம். தற்போது நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கப் போகிறோம். இப்படம் இளைஞர்களை கவரும் வகையில் சென்னையை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது என்கிறார்.