‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் இயக்குனரானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்தவர், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 26வது படத்தில் அவர் நாயகனாக நடிக்கப் போகிறார். அஸ்வத் மாரிமுத்து என்பவர் இயக்கும் இந்த படத்தின் ப்ரமோ வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த கதையில் ஏற்கனவே சிம்பு நடிக்க இருந்ததாகவும், அந்த கதையில்தான் தற்போது பிரதீப் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதை மறுத்துள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு இடத்தில் நான் கூறிய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் வேறு கதை என்று தெரிவித்திருப்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே நானும் பிரதீப் ரங்கநாதனும் ஒன்றாக பணியாற்றினோம். தற்போது நாங்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த படத்தின் டைட்டிலை வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கப் போகிறோம். இப்படம் இளைஞர்களை கவரும் வகையில் சென்னையை மையமாக கொண்ட கதையில் உருவாகிறது என்கிறார்.