எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்காக சென்னையில் உள்ள கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோவில் கட்டி கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என்று தெரியவந்துள்ளது.