மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இந்த இடத்திற்கு பிறகு தனது 69 வது படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்குகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய், சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அது சீரடி சாய்பாபா கோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த புகைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்காக சென்னையில் உள்ள கொரட்டூரில் ஒரு சாய்பாபா கோவில் கட்டி கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது என்று தெரியவந்துள்ளது.