மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் கார்த்திக் என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. புதுமண தம்பதிகளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ரோபோ சங்கர் அதுகுறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியபோது, 'கேப்டனை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வந்திருக்கிறோம்.
திருமணத்திற்கு பிறகு என் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு குலசாமியை பார்த்ததும் நேராக கேப்டனை தான் பார்க்க வந்துள்ளோம். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, விஜயகாந்தை போல் இன்னொருவர் வர முடியாது. கேப்டன் எங்களுக்கு குலசாமி. அதனால் அவரை பார்க்க இங்க வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பளித்த அண்ணியாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.