தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

தமிழில் ‛சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதியதில் அருந்ததி மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மூன்று தினங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது தான் இது வெளியே தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், ‛‛மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து ஐசியுவில் வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.




