தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் காரணமாக கோட் படத்தின் படப்பிடிப்புக்கு ரசிகர்களால் இடையூறு ஏற்படாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டு நடத்த திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.