'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது நடிகையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஆனது குறித்து சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். எனக்கு நடிப்பு புதுசு. என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், நான் நடிப்பதற்கு தயங்கினேன். மகள் வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.