சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது "தமிழ் படத்தில் அறிமுகமாகத்தான் விரும்பினேன் ஆனால் வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில் என்றாலும் இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எனக்கு சரளமாக பேசத் தெரியும். நான் நடிக்கும் படங்களில் நானே தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்து இருக்கிறேன். நான் நடிக்கும் படம் பற்றிய முறையான அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள்" என்றார்.