ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே தான் தாய்மை அடைந்திருப்பதாக கணவர் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளின் ஆடைகளைப் பகிர்ந்து 'செப்டம்பர் 2024' என்று குறிப்பிட்டு தீபிகா, ரன்வீர் எனப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதற்குள் லைக் செய்துள்ளனர். சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் பாட்மின்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட தீபிகா டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் படித்து வளர்ந்தவர். சோப் விளம்பரப் படத்தில் நடித்து பிரபலமடைந்த தீபிகா பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
முதலில் கன்னடப் படத்தில் அறிமுகமாகி பின் 2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' ஹிந்திப் படத்தில் நடித்து பிரபலமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கைக் காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தாய்மை அடைந்துள்ளார்.