இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 23 வருடங்களுக்கு முன்பு தமிழில் கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். சினிமாவில் இவர் நடித்து வந்த காலகட்டத்தில் மறைந்த நடிகர் கலாபவன் மணியை அவரது நிறத்தைக் காரணம் காட்டி அவருடன் நடிக்க மறுத்து அவமதித்தார் என ஒரு சர்ச்சை எழுந்தது. கலாபவன் மணியின் ரசிகர்கள் இவரை கடுமையாக அர்ச்சனையும் செய்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த சர்ச்சையான செய்தி குறித்து திவ்யா உன்னியிடம் கேட்கப்பட்டபோது, “நான் மணி சேட்டனுடன் (கலாபவன் மணி) நெருங்கிய நட்பு கொண்டிருந்தேன். நான் அறிமுகமான முதல் படத்திலேயே அவருடன் இணைந்து நடித்து இருந்தேன். தொடர்ந்து பல படங்களில் அவருடன் நடித்தேன். ஆனால் யார் இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி விட்டார்கள், எதற்காக செய்தார்கள் என தெரியவில்லை. மணி சேட்டன் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு இந்த விஷயம் பற்றி பேசுவதற்கே சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் இதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.