மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கை போலவே மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வரவேற்பு பெற்ற இந்த படம் பாலிவுட்டிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.
கடந்த மாதம் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகரான ஜெகதீஷ் பண்டாரி என்பவர் துணை நடிகை ஒருவரின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதாலும், ஜெகதீஷ் காரணமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தாலும் தற்போது அதை ஈடு செய்யும் விதமாக புஷ்பா 2 படக்குழுவினர் இரண்டு யூனிட்டுகளாக பிரிந்து காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.