ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

2011ம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்த படம் அவர்களும் இவர்களும். இந்த படத்தை வீரபாண்டியன் என்பவர் இயக்கியிருந்தார். வீரபாண்டியன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு கொண்டு வந்ததே நான் தான். ஆனால் இந்த விஷயத்தை அவர் எந்த பேட்டியிலும் கூறுவதில்லை. அதோடு தற்போது அவர் பெரிய நடிகையாக வளர்ந்து விட்டதால் என்னுடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் பணத்திற்கு கஷ்டப்பட்டபோது ஆட்டோவுக்கு நான்தான் பணம் கொடுத்தேன் என்றும், சில குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் வீரபாண்டியன். அவர் சொன்ன இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நேரடியாக வீரபாண்டியனை கூறாமல், மறைமுகமாக, ‛‛நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி முடிவு செய்வது வாழ்க்கையும் உறவினையும் கெடுத்துவிடும். யாராக இருந்தாலும் மொத்த கதை என்னவென்று தெரிந்து கொண்ட பிறகு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதே சரியானதாக இருக்கும் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




