புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த “சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார்' ஆகிய படங்கள் 'பாகுபலி 2' படத்தின் வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சில பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
'கல்கி 2898 ஏடி' மற்றும் மாருதி இயக்கத்தில் ஒரு படம் என அவர் நடிக்கும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொங்கலை முன்னிட்டு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியானது. படத்திற்கு 'ராஜா சாப்' எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
போஸ்டரில் பிரபாஸ் பெயர் ஆங்கிலத்தில் 'Prabhass' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை 'Prabhas' என்று இருந்ததில் கூடுதலாக ஒரு 's' சேர்த்திருக்கிறார். எதற்காக இந்த மாற்றம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள். நியூமராலஜிபடி அவர் மாற்றியிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே சமயம் 'பாகுபலி 2' போன்றதொரு வெற்றியைப் பெற பெயரில் இப்படி மாற்றம் செய்திருக்கலாம் என்றும் கூட நினைக்க வாய்ப்புள்ளது.
பிரபாஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இப்படி எதுவும் மாற்றப்படவில்லை. ஒருவேளை தவறுதலாக ஒரு 's' ஐ சேர்த்திருக்கவும் வாய்ப்புள்ளது. ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் ஒரு டவுட்டு வருகிறது.