டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் விஜய்சேதுபதியை பொருத்தவரை தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். கடந்த வருடம் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மூலமாக பாலிவுட்டிலும் நுழைந்து விட்டார். தமிழில் அவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லன் மற்றும் சில நிமிடங்களே வந்து செல்லும் சிறப்பு தோற்றம் என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல பொதுவெளியில் வரும்போது ரசிகர்களிடம் எந்தவித பந்தாவும் இன்றி பேசி பழகுபவர் என்கிற பெயரும் பெற்றுள்ளார். இதனால் பெரும்பாலும் விஜய்சேதுபதி என்றாலே எளிமையானவர் என்கிற ஒரு தோற்றம் இயல்பாகவே உருவாகிவிட்டது. ஆனால் இந்த எளிமையானவன் என்கிற அடையாளத்தை நான் விரும்பவில்லை என்று தற்போது வெளிப்படையாகவே கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய்சேதுபதி.
விஜய்சேதுபதி நடிப்பில் ஹிந்தி மற்றும் தமிழில் உருவாகியுள்ள 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகிறது. இந்த படத்தில் கத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தான் இப்படி பேசியுள்ளார் விஜய்சேதுபதி.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அணியும் உடைகள் எல்லாம் எளிமையாக தோன்றினாலும் அனைத்துமே விலை உயர்ந்தவை தான். இன்று இந்த விழாவிற்கு அணிந்து வந்துள்ள உடை, எனக்கு அணிவதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காகத் தான் அணிந்திருக்கிறேனே தவிர எளிமையானது என்பதற்காக அல்ல. மக்கள் என்னை எளிமையாக இருக்கிறார் என்பது போல கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. இன்னும் சொல்லப்போனால் எளிமையானவன் என்கிற ஒரு அடையாளத்தையே நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் விஜய்சேதுபதி.




