ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச., 28ல் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். கடந்த டிசம்பர் 29, 2023 மாலை 7 மணிக்கு கனடா தமிழர்கள் விஜயகாந்த் அவர்களுக்கு டொரொண்டோவில் அஞ்சலி செலுத்தினர். கனடா தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் வள்ளிக்கண்ணன் மருதப்பன் அஞ்சலி உரையின் போது கேப்டன் விஜயகாந்த்தின் சிறந்த நடிகர், அரசியல் தலைவர், பாசமான நண்பர் என்றும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்.
படைப்பாளிகளின் உலகம் ஆசிரியர் நந்தன் கதிர்காமநாதன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி கவிதை பாடினார். இந்த அஞ்சலி கூட்டத்தில் எஸ்டேட் மண்டப உரிமையாளர் ராஜா, சமூகம் ஊடக நண்பர் கிருபா, செய்தி.காம் ஊடக நண்பர் குணா, பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா சுப்பிரமணி, சிறுமி.ஹரிணி வள்ளிக்கண்ணன் ஆகியோர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள். ஊடக நண்பர்கள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.