எந்த படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டோம் : அவுட்டோர் யூனிட் யூனியன் அறிவிப்பு | 'கேங்கர்ஸ்' படத்துக்கு வரும் புது சிக்கல் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 18 படங்களில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : மூன்று வேடங்களில் நடித்த ஹோன்னப்ப பாகவதர் | அஜித்தின் அடுத்த படம்: சஸ்பென்ஸாக இருக்கும் நிறுவனம் | அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவ்வப்போது நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது, ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் போன்றவற்றை அமைத்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி உதவினர்.
தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(டிச., 30) சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விஜய் பின்னர் நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
1500 குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புதிய உடைகளை அவர் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் அளித்தார்.