ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் அறிமுகமான விஜயகாந்த் 157 படங்களில் நடித்துள்ளார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார். அரசியலில் பெரிய இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்த், உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவின் பொதுச் செயலாளராக ஆனார். இந்த நிலையில், விஜயகாந்தின் தாய் உள்ளம் குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அது குறித்து அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மற்றவர்களின் இலையில் சாப்பாடு இல்லை என்றால் உடனே அவர்களுக்கு சாப்பாடு வைக்குமாறு கூறுவார். என்னை அழைத்து அவரது பக்கத்தில் உட்கார வைத்து சாப்பாடு கொடுப்பார். அவரது ரசிகர்கள், கட்சிக்காரர்கள் வீட்டில் இருந்து உணவு என அனைத்தும் அவர் அருகில் இருக்கும். பெரிய கரண்டியில் எனக்கு மட்டன் அள்ளி வைப்பார். எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு முடித்து விட்டால் மயக்கம் வருவது போல் இருக்கும். அப்போது ஒரு பெரிய டம்ளரில் பாயாசத்தை கொண்டு வந்து குடிக்கும்படி சொல்லுவார் விஜயகாந்த். அதை வாங்கி குடித்தால் தூக்கம் வந்துவிடும் என்று சொல்லுவேன். அப்போது இயக்குனரை அழைத்து, பாஸ்கர் நன்றாக தூங்கிவிட்டு நான்கரை மணிக்கு வரட்டும். அதுவரைக்கும் நான் இடம்பெறும் காட்சிகளை படமாக்குங்கள் என்று கூறுவார். இப்படி ஒரு தாயை போன்று பார்க்கக் கூடியவர் தான் விஜயகாந்த். உணவு பரிமாறுவதிலும் பாசம் காட்டுவதிலும் ஒரு தாய்க்கு நிகரானவர் என்று அந்த பேட்டியில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.