ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அசோக் செல்வனை, நடிகை கீர்த்தி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் சபாநாயகன் மற்றும் கீர்த்தி பாண்டியன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கண்ணகி ஆகிய இரண்டு படங்களும் வருகிற டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவர்கள் இருவருமே தங்களது படங்களின் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கீர்த்தி பாண்டியன் அளித்த ஒரு பேட்டியில், நான் நீண்ட காலமாகவே ஒல்லியாக இருந்தேன். அதோடு கருப்பாகவும் இருந்தேன். காரணம் நான் எப்போதுமே வெயிலில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்போது என்னுடைய தோற்றத்தை பற்றியும் நிறத்தை பற்றியும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தபோது கவலையில் அழுதேன். ஆனால் இப்போது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அந்த காலகட்டத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.