அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
பொதுவாக கே.பாலச்சந்தர் நகர்புறத்து நடுத்தர மக்களையே கதை மாந்தர்களாக கொண்டு படம் எடுப்பார் என்ற பொதுவான கருத்து இருந்த காலத்தில் அவர் இயக்கிய கிராமத்து படம்தான் 'எங்க ஊரு கண்ணகி'. இதே படம் தெலுங்கில் 'தோலி கோடி கோசிந்தி' என்ற பெயரிலும் தயாரானது. பார்வை குறைபாடுள்ள ஒரு கிராமத்து பெண். அங்குள்ள வில்லன்களை எதிர்த்து போராடும் கதை.
பார்வையற்ற பெண்ணாக சரிதா நடித்தார், போலீஸ் கான்ஸ்டபிளாக சரத்பாபு நடித்தார். இவர்கள் தவிர சீமா, மாதவி, ஜீவா உள்பட பலர் நடித்திருந்தார்கள். முக்கிய நடிகர்கள் தவிர தமிழ், தெலுங்கிற்கு தனித்தனி நடிகர்கள் நடித்திருந்தார்கள். முழு படமும் ஆந்திராவில் உள்ள பட்டிசீமா வீரபத்தா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் படமானது. இதனால் தமிழ் பதிப்பிலும் தெலுங்கு வாசனை வீசியது. வில்லன் மீது நாயை ஏவி விடுவது, சரிதா, சீமா, மாதவி ஆகியோரின் குளியல் காட்சிகள் போன்றவை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழில் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் தெலுங்கில் வெற்றி பெற்றதோடு சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த பாடலாசிரியர் என 1981ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது.