ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஒரே ஆண்டில் இரண்டு 500 கோடி ஹிந்திப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய இயக்குனர்கள் இருவர் சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒருவர், 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, மற்றொருவர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா.
ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் இதுவரையிலும் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதனால், இன்னும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் தென்னிந்திய இயக்குனர்கள் மிகப் பெரும் வசூல் சாதனைகளைப் புரிந்தது கிடையாது. ஆனால், இப்போது நேரடி ஹிந்திப் படங்களை இயக்கி பெரிய வசூல் சாதனை செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.