மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதாக தகவல் பரவி வருகிறது.
அஜித் கடந்த சில வருடங்களாக ஒரு தயாரிப்பாளருக்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தார். இந்த நிலையில் இனி அந்த மாதிரி ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ந்து படங்கள் நடித்து தர வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.