டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' படத்தை ஹிந்தியில் வெளியிடுவதற்காக தணிக்கை செய்ய சென்றபோது அதற்கு 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் தணிக்கை அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் புகார் கொடுத்த விஷாலை நேற்று மும்பை சிபிஐ அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி சிபிஐ முன் ஆஜரான விஷால், அவர்களிடம் தன் தரப்பு விளக்கத்தையும், தான் வைத்திருந்த ஆதாரங்களையும் வழங்கினார். விஷாலின் மானேஜ் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛சிபிஐ வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் ஆஜரானேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன். இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும்,'' என்றார்.




