திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
கர்நாடகாவில் உள்ள மலைவாழ் மக்களின் வட்டார தெய்வத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கன்னட திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தென்னிந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
காந்தாராவின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக ரிஷப் ஷெட்டி அறிவித்திருந்தார். படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் இன்று இப்படத்தின் அறிமுக டீசர் உடன் கூடிய முதல் பார்வை வெளியாகி உள்ளது. அதில் மலைவாழ் மக்களின் தெய்வமாக ரிஷப் ஷெட்டியே ஆக்ரோஷமாக உருவெடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது.
இத்திரைப்படம் உலக அளவில் 7 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.