அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் 2022 வெளிவந்த 'காந்தாரா' படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'பிரிகுவல்' ஆக 'காந்தாரா - சாப்டர் 1' என எடுத்து வருகிறார்கள்.
அதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் கவிகுட்டா பகுதியில் உள்ள ஹெரூர் என்ற கிராமத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது வெடிப்பொருட்களைப் பயன்படுத்தியதில் படக்குழுவினருக்கும் கிராம மக்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பல காட்டு விலங்குகள் அந்தப் பகுதியில் இருப்பதால் வெடி வெடித்து படப்பிடிப்பு நடத்துவது அவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படக்குழுவினர் அங்குள்ள காட்டு மரங்களை வெட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னாள் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். மேலும் கிராம இளைஞர் ஒருவரையும் படப்பிடிப்புக் குழுவினர் தாக்கி உள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் படக்குழுவினர் மீது கடுமையாக கோபமடைந்துள்ளனர். படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தச் சொல்லியுள்ளனர். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து எசலூர் காவல் நிலையத்தினர், உள்ளூர் மக்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேவைப்பட்டால் கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுப்போம் என தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சக்லேஷ்பூர் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு செட் பொருட்களை கொட்டியதற்காக கர்நாடக வனத்துறையினர் படக்குழுவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.