பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தெலுங்குத் திரையுலகத்தில் சமீப வருடங்களில் 500 கோடி, 1000 கோடி வசூல் என்பது பரபரப்பாக உள்ளது. கடந்த வருடம் வெளியான 'புஷ்பா 2' படம் 1800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மற்றும் சமீபத்தில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் தயாரிப்பாளர்கள், நிறுவனத்தின் முக்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை பரபரப்பாகப் பேசி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிளி ஹில்ஸ், கொன்டாபுர், கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளி இவர். தற்போது தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.