வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தெலுங்குத் திரையுலகத்தில் சமீப வருடங்களில் 500 கோடி, 1000 கோடி வசூல் என்பது பரபரப்பாக உள்ளது. கடந்த வருடம் வெளியான 'புஷ்பா 2' படம் 1800 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், மற்றும் சமீபத்தில் 400 கோடி பட்ஜெட்டில் வெளியான 'கேம் சேஞ்ஜர்' படத்தைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட தெலுங்கு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் தயாரிப்பாளர்கள், நிறுவனத்தின் முக்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளிவந்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததை பரபரப்பாகப் பேசி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாரா ஹில்ஸ், ஜுபிளி ஹில்ஸ், கொன்டாபுர், கச்சிபவுலி ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீடு இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய புள்ளி இவர். தற்போது தெலங்கானா திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருக்கிறார்.