டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தீபாவளி வந்து பத்து நாட்கள்தான் ஆகிறது. ஆனால், தீபாவளிக்கு வெளிவந்த படங்கள் பத்து நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருப்பது தியேட்டர் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரக் காட்சிகளில் மிகவும் குறைவான ரசிகர்களுடன் தியேட்டர்கள் நடைபெற்று வருகின்றன. இரவுக் காட்சிகளை பெரும்பாலான தியேட்டர்களில் ரத்து செய்யும் நிலைதான் இருக்கிறதாம்.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம்தான் வரவேற்பைப் பெற்றது என்றார்கள். ஆனால், அந்தப் படத்திற்கும் கூட இந்த வாரத்தில் வரவேற்பு இல்லையாம். நாளை மறுதினம் ஏழெட்டு படங்கள் வெளியாக உள்ளன. அடுத்த சில நாட்களும் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கொட்டும் மழையில் அந்தப் படங்களை ரசிகர்கள் வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.
தீபாவளி வந்தால் குறைந்தது இரண்டு, மூன்று வாரங்களாவது தியேட்டர்காரர்கள் திருப்தியாக இருப்பார்கள். ஆனால், இந்த வருட தீபாவளி தங்களுக்கு ஏமாற்றமே என அவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.




