பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் தற்போது அதன் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில் உருவாகி தீபாவளி வெளியீடாக இன்று (நவ-10) வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பல இடங்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர் ஜிகர்தண்டா படக்குழுவினர்.
அந்த வகையில் கேரளாவுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் அங்கே மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று மம்முட்டியை சந்தித்துள்ளனர். மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா ஆகிய படங்களை இயக்கியவரும் புலி முருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவருமான இயக்குநர் வைசாக் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பில் மம்முட்டியை சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களைப் பெற்று திரும்பினார்கள் லாரன்ஸும் எஸ்ஜே சூர்யாவும். மம்முட்டியை சந்தித்தது குறித்து எஸ்ஜே சூர்யா கூறும்போது, “எங்களை சந்தித்ததற்கு மிகப்பெரிய நன்றி. அவ்வளவு ஒரு சிறப்பான நேரமாக அது இருந்தது. மம்முட்டி சாரின் டைம்லி ஜோக்குகள் சிரிக்க வைத்தது. வாட் எ எனர்ஜி” என்று கூறியுள்ளார்.