வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக, குறிப்பாக அதில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் மூலமாக இன்னும் மிகப்பெரிய அளவில் தனது ரசிகர் வட்டத்தை விரிவாக்கி உள்ளார் நடிகை தமன்னா. அதுமட்டுமல்ல முதல் முறையாக பாந்த்ரா என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரையுலகிலும் அடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக திலீப் நடித்துள்ளார். ஏற்கனவே ராம்லீலா என்கிற வெற்றி படத்தை திலீப்பிற்கு கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தீபாவளி ரிலீஸ் ஆக இன்று (நவ-10) இந்த படம் வெளியாகி உள்ளது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் திலீப், “இந்த படத்தின் கதையை முழுவதும் உருவாக்கியதுமே கதாநாயகி பாத்திரத்தில் இதுவரை மலையாள சினிமாவில் நடித்திராத ஒருவரும் அதேபோல இதுவரை தனக்கு ஜோடியாக நடித்திராத ஒருவரும் நடித்தால் புதிதாக இருக்கும் என விரும்பினோம். அந்த அளவிற்கு கட்ஸ் கொண்ட இந்த கதாபாத்திரத்திற்கு தமன்னா பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. ஆனால் அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் அருண்கோபி எப்படியோ தமன்னாவிடம் கதையை கூறி அவரின் சம்மதத்தை வாங்கி விட்டார். படத்தின் பூஜையன்று தமன்னா கலந்து கொள்ளும் வரை எனக்கு அவர் இதில் நடிக்கிறார் என்கிற நம்பிக்கையே இல்லை.
அது மட்டுமல்ல இந்த படத்தின் தமன்னா தவிர இன்னொரு முக்கிய பெண் கதாபாத்திரம் ஒன்றும் உள்ளது. அதற்காக பல நடிகைகளை அணுகியபோது தமன்னா இந்த படத்தில் நடிப்பதால் தாங்கள் நடித்தால் பெரிய அளவில் வெளியே தெரிய மாட்டோம் என நினைத்து அவர்கள் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்தனர். அதன்பிறகு நடிகை மம்தா மோகன் தாஸ் துணிச்சலாக அந்த இன்னொரு கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்” என்று கூறியுள்ளார் திலீப்.