300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதை ஏற்கனவே 'யாத்ரா' என்ற பெயரில் படமாக வெளிவந்தது. அவரது கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆந்திரா முழுவதும் நடை பயணம் சென்றார். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் 'யாத்ரா 2' என்ற பெயரில் தயாராகிறது.
இந்த பாகத்தில் ராஜசேகர ரெட்டியின் மகனும், தற்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில் சோனியா தொடர்பான காட்சிகளும் இடம் பெறுகின்றன. சோனியா வேடத்தில் ஜெர்மனி நடிகை சுஜானே பெர்னட் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு சோனியா தோற்றத்தில் இருக்கும் அவரது படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் வீ.ராகவ் கூறும்போது, “ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் தலைவராக வளர்ந்ததையும், 2009 முதல் 2019 வரை ஆந்திராவில் நடந்த அரசியல் சம்பவங்களையும் யாத்ரா 2 படத்தில் காட்சிப்படுத்துகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மீது சோனியா தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும்” என்றார்.