இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த 2019ல் மம்முட்டி நடிப்பில் தெலுங்கில் யாத்ரா என்கிற படம் வெளியானது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி முதல்வராக அரியணை ஏறுவதற்கு முன்பு அவர் செய்த சூறாவளி நடைப்பயணம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்படி திசைதிருப்பியது என்பதைத்தான் இந்தப் படத்தில் மையக்கருவாக அமைத்து படமாக்கி இருந்தார் இயக்குனர் மகி ராகவ்.
அதை தொடர்ந்து அந்த வருடமே நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வகையில் அவரது வெற்றியில் யாத்ரா படத்திற்கும் ஒரு மிகப்பெரிய பங்கு இருந்தது. இந்த நிலையில் தற்போது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை இயக்கிய மகிராகவ். இந்த படம் முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டியை மையப்படுத்தி உருவாக எண்ணி உள்ளார். அவரது தந்தை கதாபாத்திரத்தில் யாத்ரா படத்தில் மம்முட்டி நடித்தது போல, ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை இயக்குனர் அணுகியுள்ளார்.
ஆனால் துல்கர் சல்மான் இந்த படத்தில் சில காரணங்களை கூறி நடிக்க மறுத்துவிட்டார். குறிப்பாக தெலுங்கில் தற்போது துல்கர் சல்மானுக்கு ரசிகர் வட்டம் பெருகி வருகிறது, அனைத்து தரப்பிலும் அவரது ரசிகர்கள் இருப்பதால் அரசியல் சார்ந்த படத்தில் நடித்து தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க வேண்டாம் என்பதாலேயே இந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார் என சொல்லப்படுகிறது.