‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பிரமாண்டத்திற்கு தயாராகி விட்டார் நடிகர் ரன்பீர் கபூர். அவரது அடுத்த படமாக மிக பிரமாண்டமாக சரித்திர படமாக உருவாகிறது ராமாயணா. ராமர் வேடத்தில் ரன்பீர் நடிக்கிறார். சாய் பல்லவி இதில் சீதா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சன்னி தியோல் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க, கேஜிஎப் புகழ் நடிகர் யஷ் இந்த படத்தில் வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இந்த படம் குறித்து கன்னட திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
அதேசமயம் இந்த முதல் பாகத்தில் யஷ் நடிக்கும் கதாபாத்திரம் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது என்று ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் கதை அயோத்தியில் துவங்கி அதன்பிறகு வனவாசம் செல்லும் வரை ராமன் கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி நகர்வதால் படத்தின் கிளைமாக்ஸ் நெருங்கும்போது தான் ராவணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறும் என்றும் இரண்டாம் பாகத்தில் தான் யஷ் கதாபாத்திரம் இன்னும் முக்கியத்துவத்துடன் காட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.