‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாளத்தில் வெகு சில படங்களே அதன் வெற்றிக்குப் பிறகு இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மூன்றாம் பாகத்தை தொடுவது என்பது ரொம்பவே அரிது. அந்த வகையில் திரிஷ்யம் படத்தை தொடர்ந்து, நடிகர் ஜெயசூர்யா நடித்த ஆடு திரைப்படமும் ஏற்கனவே இரண்டு பாகங்களாக வெளியாகிவிட்டது.
கடந்த 2015ல் முதல் பாகமும் 2017ல இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. அதன் பிறகு படத்தின் இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு இருவரும் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, “இதுவரை மலையாள சினிமாவில் டைம் ட்ராவல் பற்றிய கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த குறையை இந்த ஆடு 3 படம் போக்கும். இரண்டு விதமான காலகட்டங்களில் இந்த படம் உருவாகிறது” என்று ஒரு சஸ்பென்சை இப்போதே போட்டு உடைத்துள்ளார்.
டைம் ட்ராவல் கதை என்கிற செய்தி கசிந்துள்ளதால் ஆடு 3 திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.