‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களாகவே 'மாளிகைப்புரம், மேப்படியான், மார்கோ' மற்றும் தமிழில் 'கருடன்' என தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி நல்ல வசூலையும் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அவதூறாக பேசியதாகவும் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உன்னி முகுந்தனும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டார் என விபின் குமார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதில் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக அவரது மேலாளர் விபின்குமார் கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, அது மட்டும் அல்ல உன்னி முகுந்தன் அவரை தாக்குவது போன்று சிசிடிவியில் எந்தவித காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.