சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களாகவே 'மாளிகைப்புரம், மேப்படியான், மார்கோ' மற்றும் தமிழில் 'கருடன்' என தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வருகிறார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி நல்ல வசூலையும் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உன்னி முகுந்தனின் மேலாளர் விபின் குமார் என்பவர் உன்னி முகுந்தன் தன்னை அவதூறாக பேசியதாகவும் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து உன்னி முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உன்னி முகுந்தனும் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டார் என விபின் குமார் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதில் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக அவரது மேலாளர் விபின்குமார் கூறுவதில் எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை, அது மட்டும் அல்ல உன்னி முகுந்தன் அவரை தாக்குவது போன்று சிசிடிவியில் எந்தவித காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.




