இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராக் அண்ட் ரோல் மற்றும் ஏ.பி புரொடக்ஷன் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இணைத்து தயாரிக்கும் படம் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீஹீரோவாக நடிக்கிறார். சந்தியா ராமசுப்பிரமணியன், அபினயஸ்ரீ இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லியாக நதியா வெங்கட் நடிக்கிறார். பிரபு, சன்னி பாபு ஹீரோ நண்பர்களாக நடிக்கிறார்கள். ராஜ் கண்ணாயிரம் இயக்கி உள்ளார். வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோசப் சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் ராஜ் கண்ணாயிரம் கூறியதாவது: இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கும், ஒரு யூடியூபருக்கும் இடையில் ஒரு பிரச்னை ஏற்பட்டு எம்.எல்.ஏ.,வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூடியூபர். இந்தப் பிரச்னையில் இருந்து 24 மணிநேரத்திற்குள் அந்த யூடியூபர் தப்பினாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை. 20 நாட்களுக்குள் இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. என்றார்.