மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது |
பிரபல சின்னத்திரை நடிகரான மிர்ச்சி செந்தில் மதுரை, சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து சின்னத்திரையில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடிகை நித்யா ராமுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஆன்லைன் மோசடி ஒன்றில் பணம் ஏமாந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'எனக்கு தெரிந்த நபர் ஒருவரின் நம்பரிலிருந்து 15000 ரூபாய் பணம் கேட்டு வாட்சப் மெசேஜ் வந்தது. நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்ததால் உடனடியாக அவர் சொல்லியிருந்த நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன். கடைசியில் பார்த்தால் அதில் வேறொருவரின் பெயர் இருந்தது. உடனடியாக அந்த நபரை போனில் அழைத்து கேட்டேன். அப்போது தான் அவர் சொன்னார். என் வாட்சப் ஹேக் செய்யப்பட்டுவிட்டது. காலையில் இருந்து 500 நபர்களுக்கு மேல் போன் செய்துவிட்டனர் என்று கூறினார். உடனடியாக சைபர் போலீஸில் புகார் அளித்துள்ளேன். தயவு செய்து மக்களே உஷாராக இருங்கள். யார் பணம் கேட்டாலும் ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்துவிட்டு பணம் அனுப்புங்கள்' என்று கூறியிருக்கிறார்.