சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தங்களது தியேட்டர்களை மிகவும் பிரபலப்படுத்த ஏதாவது சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள சில தியேட்டர்காரர்கள் நினைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அவர்களது தியேட்டர்களைப் பற்றிய பல்வேறு பில்டப்புகளையும் கொடுத்து வருகிறார்கள். சென்னையில் உள்ள சில தியேட்டர்காரர்கள் பிரபலங்களை தங்களது தியேட்டர்களுக்கு படம் பார்க்க வரவழைத்து அதன் மூலம் பிரபலமாக்க முயல்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படங்களின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவை நடக்கின்றன. அதற்கு சில லட்சங்களைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள் அந்தத் தியேட்டர்காரர்கள். ஆனால், நகரின் மையப்பகுதியை விட்டு தள்ளியிருக்கும் தியேட்டர்களில் புதிய படங்களின் டிரைலர்களைத் திரையிடுவது, அதிகாலை காட்சிகளுக்குக் கொண்டாட்டங்களை அனுமதிப்பது என பிரபலமாக்க முயல்கிறார்கள்.
சமீபத்தில் 'லியோ' படத்தின் டிரைலரைத் திரையிட தங்களது தியேட்டரில் விஜய் ரசிகர்களை அனுமதித்தது சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர். டிரைலர் திரையீடு முடிந்த பிறகு பார்த்தால் ஒரு சில இருக்கைகளைத் தவிர மற்ற இருக்கைகள் அனைத்தையும் ரசிகர்கள் நாசம் செய்தது தெரிய வந்தது. ஆனால், அது குறித்து அவர்கள் காவல்துறையிலும் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இனி தியேட்டர்களில் டிரைலர் திரையிடல் கிடையாது என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது என்பதையும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அது போலவே, அதிகாலை காட்சிகளால் தேவையற்ற சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுகிறது. அதனால், அவையும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
'லியோ' படத்தால் இப்படி சிக்கல் ஏற்படுவதால் எதிர்காலங்களில் டிரைலர் திரையிடல், அதிகாலை காட்சி ஆகியவற்றிற்கு சங்கத்தினரே மூடுவிழா செய்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.