நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
விஜய் நடித்து நாளை மறுதினம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள படம் 'லியோ'. இதே டைட்டிலை தெலுங்கில் வேறு ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி படத்தை வெளியிட தடை உத்தரவை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து 'லியோ' படம் தெலுங்கில் வெளியாகுமா என்ற புதிய சர்ச்சை எழுந்தது.
படத்தைத் தெலுங்கில் வெளியிடும் வினியோகஸ்தரான நாகவம்சி படம் திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். “இது தகவல் தொடர்பு சிக்கலால் எழுந்த ஒரு பிரச்சனை, யாரோ ஒருவர் 'லியோ' தெலுங்கு தலைப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் சீக்கிரமாகவே தீர்த்துவிடுவோம். இன்றுதான் நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிய வந்தது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை, சிக்கலில்லாமல் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் 'லியோ' படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது. இப்படி ஒரு தடை உத்தரவு வந்ததும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிக்கலா என அரண்டு போய் உள்ளனர்.