மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் நடித்து நாளை மறுதினம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள படம் 'லியோ'. இதே டைட்டிலை தெலுங்கில் வேறு ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி படத்தை வெளியிட தடை உத்தரவை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து 'லியோ' படம் தெலுங்கில் வெளியாகுமா என்ற புதிய சர்ச்சை எழுந்தது.
படத்தைத் தெலுங்கில் வெளியிடும் வினியோகஸ்தரான நாகவம்சி படம் திட்டமிட்டபடி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என பத்திரிகையாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். “இது தகவல் தொடர்பு சிக்கலால் எழுந்த ஒரு பிரச்சனை, யாரோ ஒருவர் 'லியோ' தெலுங்கு தலைப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தை நாங்கள் சீக்கிரமாகவே தீர்த்துவிடுவோம். இன்றுதான் நீதிமன்ற உத்தரவு பற்றி தெரிய வந்தது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை, சிக்கலில்லாமல் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.
தெலுங்கில் 'லியோ' படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது. இப்படி ஒரு தடை உத்தரவு வந்ததும் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிக்கலா என அரண்டு போய் உள்ளனர்.