''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
மாநகரம் படத்தில் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இயக்கியவர் அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும் படத்தின் கதை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினி 171வது படம் கண்டிப்பாக எல்.சி.யு.,வில் வராது. அது வேறு மாதிரி கதைகளம். அதோடு இதுவரை நான் இயக்கியதில் ஒரு புதுவிதமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்வதற்கு முன்பு விஜய்யிடம் தான் கூறினேன். அதைக் கேட்டதும் இந்த கதை மிக சிறப்பாக உள்ளது. எந்த ஒரு கதையையும் கேட்ட உடனேயே நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன். ஆனால் இந்த கதை என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று விஜய் கூறினார். அதன் பிறகு தான் ரஜினி இடத்தில் அந்த கதையை சொல்லுமாறு அனிருத் கூறினார். அன்று இரவே ரஜினியை சந்தித்து அந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்ட மறு நிமிடமே எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அவர் அதிக ஆர்வம் காட்டியதினால்தான் அந்த படத்தை உடனே எடுக்க திட்டமிட்டேன் என்று கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து நான் இயக்கும் 171வது படம் கண்டிப்பாக ரஜினியின் கடைசி படமல்ல. அவருடைய லைன் அப் என்னவென்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.