வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மாநகரம் படத்தில் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இயக்கியவர் அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும் படத்தின் கதை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினி 171வது படம் கண்டிப்பாக எல்.சி.யு.,வில் வராது. அது வேறு மாதிரி கதைகளம். அதோடு இதுவரை நான் இயக்கியதில் ஒரு புதுவிதமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்வதற்கு முன்பு விஜய்யிடம் தான் கூறினேன். அதைக் கேட்டதும் இந்த கதை மிக சிறப்பாக உள்ளது. எந்த ஒரு கதையையும் கேட்ட உடனேயே நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன். ஆனால் இந்த கதை என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று விஜய் கூறினார். அதன் பிறகு தான் ரஜினி இடத்தில் அந்த கதையை சொல்லுமாறு அனிருத் கூறினார். அன்று இரவே ரஜினியை சந்தித்து அந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்ட மறு நிமிடமே எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அவர் அதிக ஆர்வம் காட்டியதினால்தான் அந்த படத்தை உடனே எடுக்க திட்டமிட்டேன் என்று கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து நான் இயக்கும் 171வது படம் கண்டிப்பாக ரஜினியின் கடைசி படமல்ல. அவருடைய லைன் அப் என்னவென்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.




