மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மாநகரம் படத்தில் இயக்குனரானவர் லோகேஷ் கனகராஜ். அதையடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இயக்கியவர் அடுத்தபடியாக ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில், ரஜினியை வைத்து தான் இயக்கப் போகும் படத்தின் கதை குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ரஜினி 171வது படம் கண்டிப்பாக எல்.சி.யு.,வில் வராது. அது வேறு மாதிரி கதைகளம். அதோடு இதுவரை நான் இயக்கியதில் ஒரு புதுவிதமான படமாக இருக்கும்.
இந்த படத்தின் கதையை ரஜினியிடம் சொல்வதற்கு முன்பு விஜய்யிடம் தான் கூறினேன். அதைக் கேட்டதும் இந்த கதை மிக சிறப்பாக உள்ளது. எந்த ஒரு கதையையும் கேட்ட உடனேயே நான் இம்ப்ரஸ் ஆக மாட்டேன். ஆனால் இந்த கதை என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது என்று விஜய் கூறினார். அதன் பிறகு தான் ரஜினி இடத்தில் அந்த கதையை சொல்லுமாறு அனிருத் கூறினார். அன்று இரவே ரஜினியை சந்தித்து அந்த கதையை சொன்னேன். கதையைக் கேட்ட மறு நிமிடமே எனக்கு பிடித்து விட்டது. உடனே இந்த கதையை பண்ணலாம் என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அவர் அதிக ஆர்வம் காட்டியதினால்தான் அந்த படத்தை உடனே எடுக்க திட்டமிட்டேன் என்று கூறி இருக்கும் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து நான் இயக்கும் 171வது படம் கண்டிப்பாக ரஜினியின் கடைசி படமல்ல. அவருடைய லைன் அப் என்னவென்று எனக்கு தெரியும். ஆனால் அதை நான் சொல்ல மாட்டேன் என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.