அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சுந்தர்.சி-யின் ‛அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது தான் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதில் என்னுடைய கதாபாத்திரங்களுடன் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதுபற்றி சில இயக்குநர்களிடம் சொல்லியும் கூட எந்த பயனும் இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்'' என்கிறார்.