புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக விழாவிலும் நயன்தாரா கலந்து கொள்கிறார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் புரமோசனுக்காக எடுக்கப்பட்டுள்ள படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
“நயன்தாரா எப்போதுமே திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறவர். தனக்கு வயதாவதை உணர்ந்தும், இனி பட வாய்ப்புகள் குறையும் என்பதை உணர்ந்தும் அவர் தொழில் நுறையில் ஆர்வம் காட்டி வருகிறார்” என்கிறார்கள்.