'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். என்றாலும் இதுவரை மகனின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லி, நேற்று ஜவான் திரைக்கு வந்த நிலையில் , தனது மகன் மீர் தன்னுடைய மார்பில் படுத்து தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜவான் படவேலைகளில் பிஸியாக இருந்ததால் எனது மகனுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறியிருந்த அட்லீ, தற்போது இன்னும் நான்கு மாதங்களுக்கு தனது மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.