புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். என்றாலும் இதுவரை மகனின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லி, நேற்று ஜவான் திரைக்கு வந்த நிலையில் , தனது மகன் மீர் தன்னுடைய மார்பில் படுத்து தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜவான் படவேலைகளில் பிஸியாக இருந்ததால் எனது மகனுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறியிருந்த அட்லீ, தற்போது இன்னும் நான்கு மாதங்களுக்கு தனது மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.