பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.