ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.