லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.