போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் |
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சேரன். கடைசியாக 2019ம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் 47வது படத்தை இயக்கப் போகிறார் சேரன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பினை ஒரு போஸ்டர் மூலம் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் அமர்ந்திருக்கிறார் கிச்சா சுதீப். இப்படத்தின் இடம்பெறும் மற்ற நடிகர்- நடிகைகள், டெக்னீஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.