'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தா தமிழை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'யசோதா, சாகுந்தலம்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத்தான் தழுவின. மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் நடித்து வந்த 'குஷி' படம் நேற்று பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளிலேயே 30 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று படம் வெளியான பின்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது தெரிந்ததும் அமெரிக்காவில் இருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இது ஒரு போதும் எளிதாகக் கிடைக்காது, ஒரு கனவு நனவாகும் சாத்தியம்தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. குஷிக்கு நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சில புகைப்படங்களைப் பதிவிட்டு முதல் புகைப்படம், “படம் வெளியான பின்பு எடுத்தது,” 2வது, 3வது புகைப்படங்கள், “வெளியீட்டிற்கு முன்பாக (மன அழுத்தத்துடன்', 4வதாக இருக்கும் வீடியோ, “என்னை உயிருடன் இருக்கும் அதிர்ஷ்டமான பெண்ணாக நீங்கள் உணர வைத்த போது,” என குறிப்பிட்டுள்ளார்.